tamilnadu

img

தளவாட சாமான்களை தடையின்றி வழங்குக தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை

சென்னை, ஜூலை 27 - பொதுமக்களுக்கு தடை யின்றி சேவைகளை வழங்க தளவான சாமான்களை தேவையான அளவிற்கு வழங்க வேண்டும் என்று மின் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தென்சென்னை திட்ட கிளை-2ன் முதல் பேரவை வியாழ னன்று (ஆக. 8) கிண்டியில் நடைபெற்றது. மின்வாரியத்தில் காலியாக 50 ஆயிரம் பணி யிடங்களில் 35 ஆயிரம் இடங்கள் களப்பணி உதவி யாளர் பிரிவில் உள்ளது. ஐடிஐ படித்தவர்களையும், ஒப்பந்த ஊழியர்களையும் கொண்டு களப்பணி உதவி யாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பகுதி நேர பணியாளர்ளை முழு நேர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன

மாநாட்டிற்கு திட்டத் தலைவர் எஸ். நடராஜன் தலைமை தாங்கினார். மத்திய அமைப்பின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் எஸ். அப்பனு கொடியேற்றினார். ஐடிசி கோட்டச் செயலாளர் பி. கவுதமன் வரவேற்றார். அடையாறு கோட்டச் செய லாளர்  எம். தண்டபாணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் மாநாட்டை தொடங்கி வைத்தார். செயலாளர் டி. அன்பழகன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். தென்சென்னை மண்டலச் செயலாளர் ஏ. பழனி, திட்டச் செயலாளர்கள் என். பால்ராஜ் (செங்கல்பட்டு), டி.ஸ்ரீதர் (காஞ்சிபுரம்), எஸ்.கண்ணன் (மத்திய சென்னை), ஏ. முருகான ந்தம், வி.பங்குனியான் (தென்சென்னை), கே. ஆதன் இளங்கீரன் (டிஎன்பிஇஓ), இ.விஜயலட்சுமி (உ.பெ. ஒ.கு) உள்ளிட்டோர் பேசி னர். மாநிலச் செயலாளர் எம்.தனலட்சுமி உள்ளிட்டோர் பேசினர். தாம்பரம் கோட்டச் செயலாளர் வி. டோமினிச் சேவியர் நன்றி கூறினார். கிளை-2ன் தலைவராக எஸ். நடராஜன், செயலாள ராக டி. அன்பழகன், பொரு ளாளராக ஜி. ரவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.