tamilnadu

img

மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு போலீஸ் காவல்

சென்னை, செப்.11- மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் மூடநம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் பேசிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். 
இந்நிலையில் மகாவிஷ்ணுவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று ஜாமின் மனு அளித்திருந்த மகாவிஷ்ணு தற்போது தனது ஜாமின் மனுவைத் திரும்பப்பெற்றுள்ளார்.