tamilnadu

img

மாதவரம்: சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீ விபத்து  

மாதவரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

சென்னை ராயபுரத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து வாடகை கார் ஒன்றை மெய்ஞானம் என்பவர் எடுத்துக்கொண்டு பயணிகளுடன் ஆந்திர மாநிலம் தடா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே வந்து கொண்டிருந்தபோது கார் திடீரென நின்றுள்ளது.

இதையடுத்து காரை ஓட்டி வந்த மெய்ஞானம் என்பவர் முன்பக்கத்தில் உள்ள இஞ்சின் பகுதியை சோதனை செய்து கொண்டிருந்தபோது அதிலிருந்து புகை வந்துள்ளது. உடனே உள்ளே இருந்த 3 பேரும் காரை விட்டு இறங்கிய நிலையில், கார் முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது.  

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.  மேலும் இதில் பயணம் செய்த 4 பேரும் விரைந்து காரை விட்டு இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.