சென்னை,மே 10- சென்னை மதுரவாயல் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவன் ஜீவா 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
வெள்ளியன்று காலை மதுரவாயல் பாலத்தின் கீழே இரு சக்கர வாகனத்தில் வந்தபோது லாரி மோதி சம்பவ இடத் திலேயே மாணவன் ஜீவா உயிரிழந்தார். லாரியை ஓட்டி வந்த டிரைவர் சாலை யிலேயே லாரியை நிறுத்திவிட்டு தலை மறைவானார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீ சார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தலைமறை வான லாரி டிரைவரையும் தேடி வரு கின்றனர். தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்டை பார்க்கும் முன்பே மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.