புதுச்சேரி, ஜூலை 25- புதுச்சேரி சாரதாம்பாள் நகரில் உள்ள புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராச ரின் 117ஆவது பிறந்தநாள் மாண வர் தினவிழாவாக கொண்டா டப்பட்டது. விழாவில் பள்ளி அளவில் முதலி டம் பிடித்த 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் பயின்று தேசிய அளவில் நடைபெற்ற நுழைவுத் தேர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற 7 ஜிப்மர் மாணவர்களையும், 8 என்ஐடி மாணவர்களையும், பள்ளி யில் நடைபெற்ற அறிவியல் கண் காட்சியில் பங்கேற்ற 500க்கும் மேற்பட்ட படைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட 20 மாணவர்களின் படைப்புகளுக்கும் சிறப்பு விருந்தி னர் பேராசிரியர் ராமசாமி பரிசு வழங்கி பாராட்டினார். முன்னதாக பள்ளியின் இணைத் தாளாளர் டாக்டர் ரெஜிஸ் ஜான் பிரிட்டோ, அறிமுக உரையாற்றி னார். இதில் துணை முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா, பள்ளியின் நிர்வாக அதிகாரி மார்ட்டின், இள நிலை நிர்வாக அதிகாரி முரளிதரன், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.