tamilnadu

img

பின்லாந்தில் 7 வயதில்தான்  பள்ளியில் மாணவர் சேர்க்கை

சென்னை:
கல்விமுறை குறித்து ஆய்வு செய்வதற்காக பின்லாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,  ஜோன்சு ஹெய்னாபுரோட்டில் உள்ள லிலுன்லாட்டி முன் தொடக்கப் பள்ளியை பார்வையிட்டார்.
பின்லாந்தில் 6 வயதில் முன் தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகள், 7 வயதில் தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். முன்தொடக்கப்பள்ளியில் கற்பிக்கும் முறை, கற்றல் உபகரணங்கள், மாணவர்களின் கற்கும் திறன் உள்ளிட்டவைகள் குறித்து அப்பள்ளியின் முதல்வரிடம் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துரையாடினார்.இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

;