tamilnadu

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிக்க மறுத்துவிட்டார். மேலும், இந்த உரையில் பல இடங்களில் நான் உடன்படவில்லை போன்ற உப்பு சப்பு இல்லாத காரணங்களைக் கூறினார்.

இதையடுத்து பேரவைத் தலைவர் அப்பாவு, முழு உரையை யும் வாசித்தார். பிறகு தேசிய கீதம்  இசைக்கப்பட்டது. ஆனால்,அவை மரபை மீறி தேசிய கீதம் இசைக்கப் படுவதற்கு முன்பு ஆளுநர் அவை யிலிருந்து வெளியேறினார்.

கடந்த ஆண்டும் ஆளுநர் தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் முக்கிய  தலைவர்களின் பெயர்களை தவிர்த் தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மீண்டும் தமிழ்நாடு  அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் முழுமையாக புறக்கணிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்தியா அளவில் #GetOutRavi என்ற ஹேஷ்டாக் X சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.