tamilnadu

ஆன்லைன் வணிகத்தை தடுத்திடுக! வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை

சென்னை, ஜூன் 14- சிறு குறு வணிகர்களின் வாழ்வாதா ரத்தை பாதிக்கும் ஆன்லைன் வணிகத்தை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: அடித்தட்டு சிறு, குறு வணிகர்களை மட்டுமல்லாது, இந்திய வணிகச் சங்கங்களை பிணைத்து கொண்டு, வாழ்வாதாரத்தை அழித்துவரும் விவ சாய தயாரிப்பு, உற்பத்தி, மொத்த விநி யோகஸ்தர்கள், மொத்த வியாபாரி, சில்லரை வியாபாரி, பெட்டிக்கடை, போன்றவற்றை டி-மார்ட், ரிலையன்ஸ், லூலூ மால் போன்ற பெரு வணிக நிறு வனங்களும், ஆன்லைன் வர்த்தகமும் சாதாரண வணிகர்களின் வாழ்வாதா ரத்தை சூறையாடும் நிலை இன்னும் 10 ஆண்டுகளில் உருவாகி, மிகப்பெரும் வணிக  பாதிப்புடன் வேலை வாய்ப்பு இழப்பு, சமூகக் குற்றங்கள் பெருக்கம், ஏழ்மை பெருக்கம், வறுமைக்கோடு வாழக்கை போன்ற சமூக மாற்றங் களுக்கு காரணமாகிவிடும் என்பதை அரசு கவனத்தில் கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தை மிகவும் ஆழ்ந்து கருத்தாய்வு செய்து வணிகச் சங்கிலி உடையாமல் தடுத்து நிறுத்திட ஆவன செய்திட வேண்டும். உள்ளாட்சிக் கடைகள், அறநிலை யத்துறை கடைகளுக்கான வாடகை, வழக்குகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவந்து, நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும்.

வரி வசூலிப்பிலும், அரசு செலவினங்களி லும் வருவாய் சிதறாமல், முறையான வருவாய் இழப்பை சரி செய்து, மேலும் வரிச்சுமை இல்லாத வகையில் அரசு திட்டங்கள் நிறைவேற்றப்பட அரசு பதி வுத்துறையில் அறிவித்த தட்கல் திட்டம் போல், பிற துறைகளிலும் அரசு வரு வாய் பெருக்கத்திற்கான தட்கல் முறை திட்டத்தினை உடனடியாக அறிமுகப் படுத்தி ஊழல் முறைகேடுகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக வரிசெலுத்தும் வணிகர் களை ஊக்கப்படுத்த பரிசுத் திட்டங் கள், சான்றிதழ் அளித்தல், விருது வழங் குதல் போன்றவற்றை அரசு அறிமுகப் படுத்த வேண்டும். வணிகர் வசூலித்து செலுத்தும் வரியில் ஒரு பகுதியை, வணிகர்களின் வருங்கால வைப்புநிதி திட்டத்திற்கு ஒதுக்கிட அரசு ஆவன செய்ய வேண்டும். வணிக வரித்துறை யில் அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ண யித்திருப்பது பல்வேறு முறைகேடு களுக்கு வழிவகுக்கும் என்பதை அரசு கவனத்தில் கொண்டு, அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கும் திட்டத்தினை கைவிட வேண்டும். தஞ்சை மாவட்டம் கரந்தையில் மளிகை வியாபாரி எஸ்.கே.செந்தில் வேல் சமூக விரோதிகளால் படு கொலை செய்யப்பட்டிருப்பதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு கடும் கண்டனத்தை தெரிவிப்ப தோடு, மாநிலம் தழுவிய அளவில் வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு வலியுறுத்துகின்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.