சென்னை, பிப். 23- தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளை நிறுத்தக் கோரியும், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான வீடு கணக்கெடுப்பு மட்டுமே 2020 ஏப்ரல் 1 முதல் நடத்த வேண்டும் என பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு தமி ழக முதலமைச்சருக்கு மனு அனுப்பி யுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கமான சமத்துவ சமூகத்தைக் கட்டமைத்திட உழைத்திடும் கல்வி யாளர்களை, கல்வி செயற்பாட்டா ளர்களைக் கொண்டது பொதுப் பள்ளிக்கான மாநில மேடை. இவ்வமைப்பு தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமைத் திருத்தச் சட்டம்- 2019 ஆகியவற்றை ஆழமாகப் படித்து, விவாதித்து அதன் விளைவுகளை உணர்ந்ததன் அடிப்படையில், 30.12.2019 தேதியிட்ட எங்களது மனுவின் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் மேலான பரிசீலனைக்கு இந்த மனுவை சமர்ப்பிக்கின்றோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறு சட்டம், இரண்டிற்கும் வெவ்வேறு நோக்கம். ஆகவே இரண்டையும் இணைத்து நடத்தக் கூடாது. தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் மேலான பரிசீலனைக்கு கீழ்க்கண்ட விவரங்களை வைக்கிறோம். பத்தாண்டிற்கு ஒரு முறை நடை பெறும் மக்கள் தொகை கணக் கெடுப்பானது சென்சஸ் சட்டம் 1948-ன் கீழ் நடத்தப்படும். மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை அரசு உருவாக்க, அரசிற்கு தேவைப்படும் புள்ளி விவரங்களை மக்களிடமிருந்து பெறப்படும் விவரங்களிலிருந்து அரசிற்கு பெற்றுத் தருவது மக்கள் தொகை கணக்கெடுப்பு. சென்சஸ் சட்டத்தின் கீழ் மக்களிடம் இருந்து பெறப்படும் தனி மனித தகவல் எவராலும் பார்க்க இயலாது. சேகரிக்கப்பட்ட தகவல்களில் இருந்து பெறப்படும் புள்ளி விவரங்கள் மட்டுமே பொதுவெளியில் வைக்கப் படும். இந்த புள்ளி விவரங்கள் மட்டுமே கொள்கை வகுக்க, திட்டங்கள் உருவாக்க அரசிற்கு தேவை. பெண்கள், குழந்தைகள், விளிம்பு நிலை மக்கள் என்பன போன்று ஒரு மக்கள் பகுதிக்குத்தான், கொள்கையை மற்றும் திட்டத்தை அரசு உருவாக்குகிறது. அரசு, ஒவ்வொரு தனி நபருக்காகவும், தனித்தனியாகக் கொள்கைகளை வகுப்பதோ, திட்டங்களை உரு வாக்குவதோ இல்லை. ஆகவே, கொள்கை மற்றும் திட்டங்கள் உரு வாக்க தனி நபர் விபரம் தேவை யில்லை. அரசிற்கு எது தேவையோ அதை மக்கள் தொகை கணக்கெடுப்பு மக்களிடம் இருந்து பெற்று அரசிற்குத் தருகிறது. மக்களுக்காக அரசு உருவாக்கிய நல்வாழ்வுத் திட்டங்களை பயனாளிகளுக்கு நேரடியாக கொண்டு போய்ச் சேர்க்க ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட ‘ஆதார்’ எண்ணை அரசு பயன் படுத்துகிறது. இந்தியாவில் வாழும் சுமார் 95 விழுக்காடு (125 கோடி) மக்க ளுக்கு ‘ஆதார்’ எண் வழங்கப்பட்டுள் ளது என்பதை ஆதார் நிறுவன வலைதளம் தெரிவிக்கிறது. தனி நபர்கள் அவ்வப்போது தங்களின் தகவல்களை சரிசெய்து கொள்கின்றனர். ஒவ்வொருவர் குறித்த துல்லியமான தகவல்களை ஆதார் சேகரித்து வைத்துள்ளது. எரிவாயு மானியம், முதியோர் பென்ஷன், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட மானியங்கள் நேரடியாக மக்களைச் சென்று சேர அரசால் ‘ஆதார்’ எண் பயன்படுத்தப்படுகிறது. ‘ஆதார்’ பயன்படுத்தப்படுவதால் இடைத்தரகர்களும் ஊழலும் ஒழிக்கப்பட்டது என்று அரசு பெருமையாகக் கூறிக்கொள்கிறது. பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்ப்பதில் தொடங்கி இறந்தபின் உடலை அடக்கம் செய்யும் வரை வாழ்க்கையின் அனைத்து நிலையி லும் ஆதார் அட்டை இல்லாமல் எதையும் செய்ய இயலாது. திட்டங்களை உருவாக்க, திட்டங்களை பயனாளிகளுக்குக் கொண்டு சேர்க்க ஆகிய இரண்டு நோக்கத்திற்கும், மக்கள் தொகை பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மக்கள் தொகை கணக் கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய இரண்டும் ஒன்றுதான் என்று சொல்வதும், இரண்டையும் ஒன்றாக நடத்த முற்படுவதும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கை. உண்மை நோக்கத்தை மறைத்து செய்யப்படும் நியாயமற்ற நடவடிக்கை. எனவே, தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற வேண்டும் என்றும், மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவை யில் அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளை தமிழகத்தில் உடனடியாக நிறுத்துவதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். மக்கள் தொகை கணக் கெடுப்பு 2021க்கான வீடு கணக் கெடுப்பு மட்டும், சென்சஸ் சட்டம் 1948இன் கீழ், 2020 ஏப்ரல் 1 முதல் நடத்த வேண்டும். அதற்குரிய கேள்வி கள் மட்டுமே மக்களிடம் கேட்க வேண்டும் என்ற அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கை களை பரிசீலித்து, உரிய நடவடிக் கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை தமிழ்நாடு அரசைக் கோருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.