சென்னை, டிச. 26 - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஜன.8 அன்று மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சிபிஐ மாநிலக்குழு அலுவல கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடி யாது. நிவாரண நிதி தர முடியாது என்று ஒன்றிய நிதியமைச்சர் கூறு கிறார். அமைச்சர் என்பதை மறந்து, தமிழ்நாடு பாஜக தலைவரை போல் நிதியமைச்சர் பேசுவதை வன்மை யாக கண்டிக்கிறோம்.
கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டு, மோடி கோபித்துக் கொள்வார் என்பதற்காக, தமிழக அரசு கோரும் வெள்ள நிவாரணம் ஒன்றிய அரசு வழங்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த மறுக்கிறார்.
ஒன்றிய அரசிடம் இருந்து நிதியை பெற்று தராமல், விளம்பரத் திற்காக பாஜக தலைவர் அண்ணா மலை ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வேண்டும் என்கிறார்.
எனவே, தேசிய பேரிடராக அறிவிக்க மறுக்கும் ஒன்றிய அரசு, நிதி அமைச்சரை கண்டித்து, மாநில அரசு கோரும் நிவாரணம் வழங்க கோரியும் ஜன.8 அன்று மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவல கங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.