ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24 ஆம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமை சார்ந்த முழுமையான வளர்ச்சிப் பணிகளில் கடந்த 30 ஆண்டுகாலமாக ஈடுபட்டு வரும் பார்வேர்டு(மகளிர் வளர்ச்சி மற்றும் உரிமை மையம்) சார்பில் நிறுவனர் எம். ஷியாமலா பேபி தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பள்ளி-கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.