“தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்காமல் மாநில பேரிடர் நிவாரண நிதியாக ஏற்கனவே இருக்கும் தொகையை கழித்து விட்டு மீதித் தொகையை உள்துறை அமைச்சகம் ஒதுங்கியிருப்பது ஒன்றிய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. மேலும், பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக பேசுவதை அப்பட்டமான போலிக் கண்ணீராகத் தான் கருத முடியும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார்.