சொர்க்கம் என்ற ஒன்றில்லை,
கற்பனை செய்யுங்கள்
முயற்சி செய்யுங்கள், மிக எளிது
காலுக்கு கீழே நரகம் ஏதும் இல்லை
தலைக்கு மேலோ ஆகாயம் மட்டுமே
மக்கள் அனைவரும்
இன்றைக்கான வாழ்வை வாழ்கின்றார்கள்,
கற்பனை செய்யுங்கள்
தேசங்கள் என்று ஏதும் இல்லை,
கற்பனை செய்யுங்கள்
கடினமான காரியம் இல்லை
எதையும் கொல்ல வேண்டாம்
எதற்காகவும் சாக வேண்டாம்
மதங்கள் என்று ஏதுமில்லை, ஆம்
கற்பனை செய்யுங்கள்,
மக்கள் அனைவரும் சமாதானமாக வாழ்கின்றார்கள்
நீங்கள் சொல்லலாம்,
நான் கனவு காண்கின்றேன் என்று
ஆனால் கனவு காண்பது நான் மட்டுமே அல்ல
என்றாவது ஒருநாள்
நீங்களும் என்னுடன் இணைந்து கொள்வீர்கள்
அன்று உலகம் ஒரே உலகமாக இருக்கும்
சொத்து என்று ஏதுமில்லை.
கற்பனை செய்யுங்கள்.
உங்களால் முடியும் எனில் நான் வியப்புறுவேன்
பொறாமைக்கும் பசிக்கும் இடமில்லை
சகோதரத்துவம் மட்டுமே எங்கிலும்
கற்பனை செய்யுங்கள்,
உலக மக்கள் அனைவரும்
இந்த உலகினை பகிர்ந்துகொள்கின்றார்கள்
நீங்கள் சொல்லலாம்,
நான் கனவு காண்கின்றேன் என்று
ஆனால் கனவு காண்பது நான் மட்டுமே அல்ல
என்றாவது ஒருநாள் நீங்களும் என்னுடன்
இணைந்து கொள்வீர்கள்
அன்று உலகமக்கள் அனைவரும்
ஒன்றாக வாழ்வார்கள்.
-ஜான் லென்னான்
தமிழில்: மு.இக்பால் அகமது
... ...
ஜான் லென்னான் (9.10.1940 - 8.12.1980) புகழ்பெற்ற பீடில்ஸ் இசைக்குழுவை நிறுவியவர். பாடகர், பாடல் ஆசிரியர், கிடார் இசைக்கலைஞர். நிறவெறி, அடக்குமுறை, போர் ஆகிய கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர், பாடல்களை எழுதியவர். வியட்நாம் மீதான அமெரிக்காவின் கெடுபிடி போரை எதிர்த்து வெளிப்படையாக குரல் கொடுத்த தால் அமெரிக்க அரசின் தொந்தரவுகளை எதிர்கொண்டார். வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த நாட்களில் இக்கவிதையை எழுதினார் (மார்ச் 1971). அவரது கொள்கை களுடன் முரண்பட்ட ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.