சென்னை,ஜூலை 25- சென்னையில் பல்வேறு பகுதிகளில் கேட்பாரற்று நீண்ட காலமாக வாகனங்கள் கிடக்கின்றன. சாலைகள், முக்கிய தெருக்களில் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் யாரும் சொந்தம் கொண்டாடா மல் கேட்பாரற்று கிடக்கின்றன.
இது அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. மழை யிலும், வெயிலிலும் அந்த வாகனங்கள் சேதமாகி ஒன்றுக்கும் பயன்படாத வகை யில் வீணாகி பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. சாலையோரங்களில் துருப்பிடித்து வீணாக கிடக்கும் அந்த வாகனங்களை அகற்றி ஏலம் விட மாநகராட்சி திட்ட மிட்டுள்ளது. கேட்பாரற்று கிடக்கும் இந்த வாகனங் கள் ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதா என்பதை பார்க்க போலீசாரின் அனுமதி கேட்டு இருப்பதாக மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் இந்த வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் அகற்றப்படும். ஒவ்வொரு வாகனத்தையும் அகற்ற ஒப்பந்ததாரருக்கு பணம் செலுத்தப் படும். அகற்றப்படும் வாகனங்கள் ஏலம் விடுவதற்கான கொள்கை வகுக்கப்படு கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,310 வாகனங் கள் அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் 327 வாகனங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள் ளது. கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை இழுத்து செல்ல ஒப்பந்ததாரரை பணிய மர்த்துவதற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
சென்னையில் இதுபோன்ற வாகனங் களில் 80 விழுக்காடு 4 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் 10 விழுக்காடு, மீத முள்ளவை இரு சக்கர வாகனங்கள் என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. நம்பர் பிளேட் இல்லாத 10 வாகனங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. தென் சென்னையில் 395, வட சென்னை யில் 271, மத்திய பகுதியில் 644 வாகனங்கள் கேட்பாரற்று உள்ளது. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பெருங்குடி குப்பை கிடங்கு, மணலியில் சாத்தாங்காடு லாரி ஷெட், முல்லை நகர் மயானம், ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கம் உள்ளிட்ட 10 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.