சென்னை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், கடந்த 12ஆம் தேதி உடல் நலக்குறைவால் சேலத்தில் காலமானார். அவரது உடல் அவரது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் தகனம் செய்யப்பட்டது. முதலமைச்சரின் தாயார் மறைவு காரணமாக, அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.தாயாரின் இறுதிச் சடங்கு, அதுசார்ந்த நிகழ்வுகளை முடித்துவிட்டு சேலத்திலிருந்து சென்னைக்கு முதலமைச்சர் வருகை தந்தார்.சென்னைக்கு வந்த முதலமைச்சர் பழனிசாமியை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் (அக்.19) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, அவரது தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். முன்னதாக, முதலமைச்சரின் தாயார் படத்துக்கு மலர் தூவி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.இச்சந்திப்பின்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.