13 மீனவர்களை கைது செய்தது இலங்கை
புதுக்கோட்டை, செப்.7- புதுக்கோட்டை மாவட் டம் ஜெகப்பட்டினம் விசைப் படகு மீன்பிடி தளத்தில் இருந்து சனிக்கிழமை காலை 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன வர்கள் மீன்பிடிக்க கட லுக்குச் சென்றனர். இதில், மூன்று விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற 14 மீன வர்கள் நெடுந்தீவு அருகே சனிக்கிழமை மாலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையி னர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 14 பேரை யும் கைதுசெய்து, விசைப் படகையும் பறிமுதல் செய்த னர்.
உ.பி. பேருந்து விபத்தில் 17 பேர் பலி!
லக்னோ, செப்.7- உத்தரப்பிரதேச மாநி லம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கன்வர்பூர் கிராமத்திற்கு அருகே ஆக்ரா - அலிகர் தேசிய நெடுஞ்சாலையில், ஹத்ராஸில் இருந்து ஆக்ரா வுக்கு, வெள்ளிக்கிழமை மாலையில் சிலர் வேனில் பயணம் செய்துள்ளனர். அப் போது, பின்னே வந்த பேரு ந்து, வேனை முந்திச்செல்ல முயன்ற போது, எதிர்பாராத விதமாக, வேன்மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த, நான்கு பெண் கள், குழந்தைகள் உள்பட 17 பேர் பலியாகினர்.
இந்தூர் - ஜபல்பூர் விரைவு ரயில் தடம் புரண்டது!
ஜபல்பூர், செப்.7- இந்தூர் - ஜபல்பூர் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஜபல்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் “இந்தூர்-ஜபல் பூர் விரைவு ரயிலின் (22191) இரண்டு பெட்டிகள் ஜபல்பூர் நிலையத்தின் 6-ஆவது நடை மேடையை நோக்கி வந்து கொண்டிருந்த போது சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது” என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். நல் வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விநாயகர் சதுர்த்தி:
ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு
சென்னை, செப்.7- விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட 65 அமைப்புகள் பொது இடங்க ளில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை வைத்துள்ளன. சுமார் 13 ஆயிரம் இடங்க ளில் 35 ஆயிரம் விநாயகா் சிலைகளை அமைக்க காவல் துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனி னும், சரியான எண்ணிக்கை விவரம் பின்னரே தெரியவரும் என காவல்துறை உயர் அதி காரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை யொட்டி, தமிழகம் முழுவ தும் ஒரு லட்சம் போலீசாரும், சென்னையில் 15 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.