தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மீண்டும் பிளாஸ்ட்க் பைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் வர ஆரம்பித்தன. இந்நிலையில் முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சோதனை செய்து அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.