tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்

செங்கல்பட்டு, மே 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டிலிருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு  சிறப்பு ரயிலில் ஆயிரத்து 464 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநி லத்திற்கு செல்ல செங்கல்பட்டில் இருந்து சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சி புரம் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் கடந்த  11ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தது. அதன்படி திங்களன்று (மே 18) ஜார்கண்ட் மாநிலத்திற்கு செங்கல்பட்டு ரயில்  நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக் கப்பட்டது. இரவு 9 மணிக்கு புறப்பட்ட அந்த ரயிலில் ஆயிரத்து 464 தொழிலாளர்கள் பய ணம் மேற்கொண்டனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்ல மேலும் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டச்  செயலாளர் கே.சங்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

;