tamilnadu

img

பாவட்டக்குடியில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

குடவாசல், ஆக.28- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றி யம், பாவட்டக்குடி ஊராட்சியில் பல்வேறு  கட்சியிலிருந்து விலகி 30-க்கும் மேற்பட்டோர்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.  இதனையடுத்து நடைபெற்ற கொடி யேற்றுதல் நிகழ்ச்சிக்கு கட்சியின் பாவட்ட க்குடி கிளை செயலாளர் பி.ரீகன், தலையூர் கிளை செயலாளர் அ.ராமச்சந்திரன் ஆகி யோர் தலைமை வகித்தனர். ஒன்றிய செய லாளர் டி.வீரபாண்டியன் செங்கொடி ஏற்றி  வைத்து உரையாற்றினார் . மாவட்ட கவுன்சி லர் ஜெ.முகமதுஉதுமான், மாவட்ட குழு உறு ப்பினர்கள் தியாகு ரஜினிகாந்த், கே.தமிழ்ச்செ ல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் பண்டாரவடை ஊராட்சிமன்ற தலைவர் பி.  ஜெயசீலன், வாலிபர் சங்க ஒன்றிய தலைவர்  வரத.வசந்தபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.