tamilnadu

மே 26ல் செங்கல்பட்டிலிருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு சிறப்பு ரயில்

செங்கல்பட்டு, மே 21- புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் சொந்த மாநி லத்திற்குச் செல்ல செங்கல்  பட்டு ரயில் நிலையத்தி லிருந்து மே.26 அன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் சொந்த மாநி லத்திற்கு செல்ல செங்கல் பட்டிலிருந்து சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் மே11  அன்று மாவட்ட ஆட்சிய ரைச் சந்தித்து மனு அளித்தார். இதனையடுத்து மே18 அன்று ஜார்கண்ட் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. கூடுதல் ரயில்களை இயக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி வலியுறுத்திய நிலை யில், மே 26 அன்று மீண்டும் ஒரு சிறப்பு ரயில் ஜார்கன்ட் மாநிலத்திற்கு இயக்கப்பட உள்ளது.