tamilnadu

சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டையை திருத்த சிறப்பு முகாம்

சென்னை,ஆக.17- சென்னை மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரி களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் திருத்தம்  மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் ஆக.19-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரி களின் நலனை காக்கவும், சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்தவும் மாநகராட்சி சார்பில் நகர விற்பனைக்  குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநகரம் முழுவதும் 35  ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரி கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் சில விவரங்கள் தவறாக இடம்பெற்றிருப் பதாகவும், அதை அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியவில்லை என்றும், இதன் அடிப்படையிலேயே, சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் மற்றும் பல்வேறு நலதிட்டங்கள் வழங்கப்படுவதால், அதில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி  வரை 3 நாட்களுக்கு அடையாள அட்டை திருத்த முகாமை மாநகராட்சி நடத்துகிறது.  “சென்னை மாநகராட்சியில்‌ கடந்த 2023-ம்‌ ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

அவற்றில் உள்ள விவரங்களில்‌ ஏதேனும்‌ திருத்தம்‌ தேவைப்படுவோர்‌, திருத்திக்கொள்ள வரும் ஆக.19 முதல் 21-ம் தேதி வரை சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து மாநகராட்சி மண்டல மற்றும் வட்டார அலுவலகங்களில் நடைபெற உள்ளது. சிறப்பு முகாமில் முதுநிலை வருவாய்‌ அலு வலர்களிடம்‌ திருத்தம் கோரும் படிவங்களை வழங்க கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது” என இது மாநகராட்சி அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.