tamilnadu

‘மென்பொருள் சேவைகள் தலைநகராக சென்னை மாறிவருகிறது’

சென்னை,ஜன.13- நாட்டின் மென்பொருள் சேவை களின் தலைநகராக சென்னை மாறி வருகிறது என்று தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்  துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ப்ரூக்ஃபீல்ட்ஸ் அஸ்ஸட் மேனேஜ்மென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும்  டிஜிட்டல் ரியாலிட்டி ஆகிய நிறு வனங்கள் இணைந்து அதிக அளவில், தரவு மற்றும் தகவல்கள்  சேமிப்பு திறன் கொண்ட மையம்  சென்னை அம்பத்தூர் தொழிற் பேட்டையில் தொடங்கப்பட்டுள் ளது. தமிழ்நாட்டில் முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ள இம்மை யத்தின் தரவு மைய கட்டிடத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக சென்னை உள்ளது.

சென்னையில், குறுகிய காலத்தில் ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவின் மிக முக்கிய தரவு மையமாகவும், மென்பொருள் சேவைகளின் தலை நகராகவும் தற்போது சென்னை வளர்ந்து வருகிறது. நாட்டின் பொரு ளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் டிஜிட்டல் மயம் ஆக்குவதிலும், ஏற்றுமதி மற்றும் மென்பொருள் சேவைகளில் வேகமாக வளர்ச்சி அடைவதிலும் நமது நாடு தற்போது  முனைப்புக் காட்டி வருகிறது” என்றார்.