சென்னை பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்த வர்கள் நேரில் வந்து முறையிட்டு செல்கின்றனர். முதியவர்களை அலுவலகத்தில் அழைத்துச் செல்வதற்கு சக்கரநாற்காலிகள் வைக்கப்படவேண்டும் என்று அரசு வழிகாட்டுதல்கள் இருந்தும் அதனை அதிகாரிகள் பின்பற்று வதில்லை எனக் கூறுகின்றனர். இந்நிலையில், வியாசர்பாடியைச் சேர்ந்த 92 வயது சுசிலா என்ற மூதாட்டி தல்லாத வயதில் நடந்து வந்து உதவித்தொகை கேட்டு சென்றார். நடக்க முடியாதவர்களை அலையவிடாமல், வீட்டிலேயே சென்று அதிகாரிகள் கணக்கெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.