tamilnadu

img

காவல்துறைக்கு தெரியாமல் இருக்காது!

“கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு பின்புறம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து இதுவரையில் 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என்கின்றனர். பெரும் துயரம். காவல்துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் நடந்திருக்க வாய்ப்பில்லை. சம்பந்தப்பட்ட காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்தால் போதாது. கைது செய்து நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.