tamilnadu

கிசான் திட்ட மோசடியில் இதுவரை 101 பேர் கைது... ரூ.105 கோடி பறிமுதல்: சிபிசிஐடி தகவல்

சென்னை:
தமிழகம் முழுவதும் பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்கள் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.மத்திய அரசின் கிசான் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.110 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.கிசான் முறைகேடு வழக்கு சிபிசிஐடி வசம் சென்றது. இதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கிசான் திட்ட மோசடியில் ஈடுபட்டவர்கள் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் மோசடி செய்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.105 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் கிசான் முறைகேடு தொடர்பாக 100 பேர் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.