tamilnadu

img

மக்களைச் சுரண்டவே ஸ்மார்ட் மீட்டர்

திறன்மிகு அளவி (ஸ்மார்ட் மீட்டர்) திட்டத்தில் நேரத்திற்கு நேரம் கட்டணம் மாற்றி அமைத்து வசூலிக்கப்படும் என்று மின் ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். ‘மின்சார துறை தனியார்மயம் - ஸ்மார்ட் மீட்டர் வருகையால் ஏற்படும் ஆபத்துக்கள்’ எனும் தலைப்பில் வெள்ளியன்று (அக்.14) சென்னையில் கருத்தரங் கம் நடைபெற்றது. இந்திய மின்  ஊழியர் கூட்டமைப்பு - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பு இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தின. மின்துறை  சேவைத் துறையாக பார்க்காமல் ஒன்றிய அரசு லாப நட்டக் கணக்கு  பார்க்கிறது. மாநில மின் வாரியங்க ளுக்கு ஏற்பட்ட நட்டத்தை சரி  செய்ய திட்டமிடாமல் தனியார்மய மாக்க முயற்சித்து வருகிறது. அதற்கேற்ப மின்சார சட்ட திருத்த  மசோதா 2022-ஐ நாடாளு மன்றத்தில் நிறைவேற்றிய, ஒரே  நாடு, ஒரே மின்சாரம் என்ற நடை முறையை கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. மின்துறை தனியார் வேட்டைக்காடாக மாற்ற பார்க்கிறது. தற்போது, இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 56  விழுக்காடு தனியார் உற்பத்தி  செய்கின்றனர். மின் விநியோகத் தில் தனியாரை அனுமதித்தால் பாமர மக்களுக்கு மின்சாரம் குறைந்த விலையில் கிடைக்காது. வசதி உள்ளவர்களுக்கே மின்சா ரம் என்ற நிலை ஏற்படும். மின்சாரத்தை தனியார்மயப் படுத்துவதை எளிமைப்படுத்த, மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் ஒன்றிய அரசு செயல்படுத்துகிறது. இதனால் அரசின் மானியங்கள் கேள்விக்குறியாகும். மீட்டர்களை பொருத்துவது, பராமரிப்பது போன்ற பணிகள் தனியாரிடத்தில் செல்வதால் மாதாந்திர பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டி வரும். எதிர்காலத்தில் ஸ்மார்ட் மீட்டர்கள் ப்ரீபெய்ட் மீட்டர்களாக  மாற்ற உள்ளனர். நேரத்திற்கு ஏற்ற வாறு மின் கட்டணத்தை நிர்ணயம் செய்து கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்படும். இந்த கட்டண உயர்வு கடுமையாக இருக்கும். இத்திட்டம் நுகர்வோர்களையும், மின்வாரிய பணியாளர்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, மின்சாரத்தை தனியார்  மயமாக்கும் திருத்த சட்ட மசோதா வும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை யும் ஒன்றிய அரசு கைவிட வேண்டும். அதற்கான அழுத்தங் களை மாநில அரசுகள் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கருத்தரங்கில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்நிகழ்வுக்கு மத்திய அமைப்பின் மாநில தலைவர் தி.ெஜய்சங்கர் தலைமை தாங்கி னார். மின் ஊழியர் கூட்டமைப் பின் அகில இந்திய தலைவர் இளமறம் கரீம், செயல் தலை வர் எஸ்.தேவராய், பொதுச்செய லாளர் பிரசாந்தோ நந்தி சௌத்ரி, செயலாளர் சுதீப் தத்தா,  சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந் தரராசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் துணைத்தலைவர் பி.சண்முகம், மத்திய அமைப்பின்  பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன், பொருளாளர் எம்.வெங்கடே சன், செயலாளர் இ.விஜயலட்சுமி, தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் அமைப்பின் பொதுச்செயலாளர் கே.அருள்செல்வன், சிறு,குறு தொழில் முனைவோர் ஒருங்கி ணைப்புக் குழுவை சேர்ந்த கே.கிருஷ்ணசாமி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை யின் மத்திய சென்னை மாவட்டத்  தலைவர் ப.தேவராஜ் உள்ளிட் டோர் பேசினர்.