tamilnadu

img

உடைந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டுள்ள சிறு பாலம்

திருநாவலூர் ஒன்றியம் வாணாம்பட்டு கிராம ஊராட்சியில் கிழக்குத் தெருவில் அமைந்துள்ள சிறு பாலம் உடைந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டுள்ளன. இதனால் எந்த நேரமும் ஆபத்து நேரலாம் என்ற சூழலில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அச்சத்துடன் இதனை கடக்கும் நிலை பல மாதங்களாக நீடித்து வருகிறது. ஒன்றிய நிர்வாகம் உடனடியாக இதனை ஏற்று புதிய பாலமாக கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;