சென்னை, ஏப்.10- பொதுமக்களிடம், “தி மயி லாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட்” என்ற நிறுவனம் மூலம் ரூ.525 கோடியை மோசடி செய்துள்ள சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் டி. தேவநாதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ் நாடு காங்கிரஸ் செய்திப் பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன், வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் ஆகியோர் சென்னை பெரு நகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை யும் அளித்துள்ளனர். தங்க ளின் புகார் தொடர்பாக செய்தி யாளர்களுக்கு பேட்டியும் அளித்துள்ளனர். அதில் அவர் கள் கூறியிருப்பதாவது: “மயிலாப்பூர் நிதி நிறு வனம் இந்தியாவில் உள்ள பழ மையான நிதி நிறுவனங்களில் ஒன்று. இதில் ரூ.525 கோடி மோசடி நடைபெற்றுள்ளது.
தேவநாதன் அளித்துள்ள காசோலை 4 மாதமாக வங்கி யில் செல்லுபடி ஆகாமல் திரும்பி வந்துள்ளது. அவ்வா றிருக்கையில் அவர் தேர்தலில் போட்டியிட ‘பி’ படிவத்தில் எப் படி அண்ணாமலை கையெ ழுத்திட்டார்? ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம னும் இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க வேண்டும். தேர்தல் முடிந்தவுடன் தேவ நாதன் வெளிநாடு தப்பி சென் றால் அவரை பிடிப்பது கடி னம் என்பதால் தமிழ்நாடு காவல்துறை இந்த பிரச்சனை யில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அண்ணாமலை இருவரும் தேவநாதனை பாதுகாக்க முயற்சிக்கக் கூடாது. தேவநாதனின் மோசடி யால் 5 ஆயிரத்திற்கும் மேற் பட்ட அரசு ஓய்வூதியர்கள் மற் றும் மூத்த குடிமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட் டுள்ளது. எனவே, தேவநாதன் மற்றும் அவரது கூட்டாளிகளின் சொத்துக்களை முடக்கி, ஏழை முதலீட்டாளர்களுக்கு உடனடி யாக பணத்தை திருப்பி கொடுக்கவும் குற்றவாளிகள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டு உரிய தண் டனை வழங்கவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.