tamilnadu

img

மெட்ரோ ஊழியரை தாக்கி கைதான பாடகர் வேல்முருகன்!

சென்னை, மே 13- சென்னை விருகம்பாக் கம் பகுதியில் மெட்ரோ  ரயில் பணிகள் நடந்து வரு கின்றன. இதனால் இரவு  நேரங்களில் ஆற்காடு  சாலை ஒரு வழிப் பாதை யாக மாற்றப்படுகிறது. அதன்படி, மே 11 அன்று இரவு 11 மணிக்கு விருகம்  பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் கோவில் சிக்னல் அருகே தடுப்பு அமைத்து ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.  அப்போது அவ்வழியாக காரில் வந்த சினிமா பின்னணி பாடகர் வேல்முருகன், பேரிகாடை நகர்த்திவிட்டு காரை இயக்க முயன்றுள்ளார்.

இதைப் பார்த்த மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு நிறு வனத்தின் உதவி மேலாளர் வடிவேல், பணிகள்  நடப்பதாக கூறியுள்ளார். அப்போது, இருவருக்  கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திர மடைந்த வேல்முருகன், உதவி மேலாளரை ஆபாச மாக பேசியதுடன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உதவி மேலாளர் வடிவேலுவுக்கு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை  மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் சம்பவம் குறித்து உதவி மேலாளர்  வடிவேலு அளித்த புகாரின் பேரில், வேல்முருகன்  மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த  விருகம்பாக்கம் போலீசார், வேல்முருகனை எச்ச ரித்து, கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்துள்ளனர்.