tamilnadu

img

அமைதிக்காக சத்தமிடு...

.போராட்டத்திற்கு அனுமதி கொடுக் கவே மறுக்கிறது காவல்துறை. சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி க்கு எதிராக யாரும் போராடக்கூடாது என்கிறது அரசு எந்திரம். காவல்துறை அச்சுறுத்தல், வழக்கு கள், கைது நடவடிக்கைகளை தாண்டி சிறுவர் முதல் பெரியவர் வரை அனை வரும் போரடி வருகின்றனர். பெண்கள்தான் போராட்டங்களின் முன் வரிசையில் நிற்கின்றனர். மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கும் போது, மக்களின் மதம் கடந்த ஒற்றுமை வலுப்பெறுகிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் தங்கள் மதவெறி நிகழ்ச்சி நிரலை நிறை வேற்ற சதி செய்யும் நேரத்தில், சதியை முறியடிக்க போராடும் மக்களின் போராட்ட உறுதியும், தியாகமும் அர்ப்பணிப்பும் மதிப்புக்குரியது
வண்ணாரப்பேட்டை ஷாகின் பாக்:
அரசியலமைப்புச் சட்டமே நாட்டின் அடித்தளம். அந்த அடித்தளமே ஆட்டம் கானுகிற வகையில் சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சியை கொண்டு வந்திருக்கிறது பாஜக. இதற்கெதிராக கேரளா உள்ளிட்ட 14 மாநில சட்டப் பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதைப் போல் தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், போராட்டங்களின் மையமாக மாறியிருக்கிறது வண்ணாரப்பேட்டை  லாலாகுண்டா பகுதியில் நடைபெறும் ஷாகின் பாக் போராட்டம்.
உறுதியும் - ஒழுங்கும்:
பிப்ரவரி 14 அன்று துவங்கிய போராட்டம் அன்று காவல்துறை நடத்திய வன்முறை வெறியாட்டத்துக்கு பின்னர்தான் வலுவான போராட்டமாக மாறியது. 32 நாட்களாக உறுதியுடன் மக்கள் போராடி வருகிறார்கள். பல்வேறு இயக்கங்கள் இருந்தாலும் பொதுவான போராட்ட மாகவே நடைபெற்று வருகிறது. போராட்டக்குழு மிகவும் ஜனநாயக பூர்வ மானதாக போராட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்றது.  தனித்தனியாக காவல் துறையினர் மிரட்டினாலும் யாரும் பயப்படுவதாக இல்லை. மக்களின் இந்த உறுதிக்கு முன்பாக ஆட்சியாளர்கள்தான் பணிய வேண்டுமே தவிர மக்கள் மண்டியிட மாட்டார்கள் என்பதை நிரூபிக்கிறது இந்த போராட்டங் கள். யாருக்கும் தொந்தரவில்லாமல் சாலையை ஒழுங்குபடுத்துவதில் துவங்கி, குப்பைகளை அப்புறப்படுத்துவது, கூட்டத்தில் தொலைந்தவர்களை கண்டு பிடிக்க உதவுவது, தொலைந்து போன செல் போன்கள், தங்க நகைகளை கண்டெடுப் பவர்கள் மேடையில் வந்து ஒப்படைப்பது, பள்ளி கல்லூரி மாணவர்களை தேர்வுக்கு தயாராகச் சொல்வது என சமூக அக்கறையு டனும், பொது ஒழுங்குடனும், போராட்டம் நடந்து வருகிறது. தேசத் தலைவர்கள் பலரது பெயரை உச்சரித்தாலும், காந்தி, திப்பு சுல்தான் பகத்சிங், அம்பேத்கர், பெரியார் பெயர் இல்லாமல் இளைஞர்கள் கோஷம் போடுவ தில்லை. இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கம் தான் தாரக மந்திரமானது. 9 வயது சிறுவன் ஜாபர் தன் முதுகை பின்னால் வளைத்து ஆசாதி என்று முழங்குகின்ற அந்த முழக்கம் எத்தனை முறை பார்த்தாலும் உடல் சிலிர்க்கிறது. சிறுவர்களுக்கு போராட வேண்டும் என்று யாரும் கற்றுத் தருவ தில்லை. அது அவர்களுக்குள்ளேயே இருக்கிறது. அமைதி வேண்டுமெனில் சத்தமிட வேண்டும் என்பதை சிறு வாழ்க்கை அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. இன்குலாப் ஜிந்தாபாத் எனும் முழக்கம் மட்டும்தான் எல்லாவற்றையும் விட அதிக சத்தத்துடன் கேட்கிறது.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி லிருந்து முருகேசன், நீதி தேவன், ஜூகைப் முஜாகித், நிசார், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்திலிருந்து பாக்கியம், எஸ்.பவானி, லலிதா, இந்திய மாணவர் சங்கத்திலிருந்து இசக்கி நாகராஜ், ராஜேந்திர பிரசாத், காவ்யா, மகேஷ் ஆகியோர் முழுமையாக போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.ராணி, பகுதி செயலாளர் செல்வானந்தம், ஏ.கே.ஷாஜகான், டி.வெங்கட், ஜாபர், கலீல்,  நூர் அகமது, கவுஸ் ஷாஜகான், காசிம், முகமது பவுஸ், வாலிபர் சங்கத்திலிருந்து சரவணத்தமிழன், சேகுவேரா, தேன்மொழி, அழகுபாண்டி, வில்லியம்ஸ், ரஞ்சித், ராஜேஷ், மோகன், உதயா, காலித், மாதர் சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செல்வி, கோட்டீஸ்வரி, பூங்குழலி, பிரமிளா, புஷ்பா, சாந்தி பகுதி நிர்வாகிகள் பிரேமா, ஈஸ்வரி, ஆகியோர் 32 நாட்களாக தினசரி போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். பல்வேறு இடதுசாரி அமைப்புகளின் மாநில மாவட்டத் தலைவர்களும், முற்போக்கு இயக்கங்களின் கலைக் குழுவினரும் தினசரி வந்து செல்கின்றனர். தினசரி 1 மணி நேரம் வாலிபர், மாணவ சங்கத்தினர் புரட்சிகர பாடல்களையும், சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி.க்கு எதிரான பாடல்களையும் பாடி வருகின்றனர்.  வாலிபர், மாணவர், மாதர் அமைப்ப்பின் சார்பாக யார் மேடை ஏறினாலும், போராட்டம் துவங்கிய நேரத்திலிருந்து நம்முடன் இருக்கிற தோழர்கள் என்று போராட்டக்குழு அறிவிக்கிறது. அந்த அளவு போராட்டக் குழுவுடனும், போராடும் மக்களுடனும் நமது அமைப்புகள் இரண்டற கலந்துள்ளன. ஏற்கெனவே தனித்தனியாக அமைப்பின் பெயர்களில் போராட்டங்களை நடத்தி வந்தாலும், தன்னெழுச்சி போராட்டங்களிலும் இடது சாரி இயக்கங்கள் கலந்து கொள்கின்றன.
காவல் துறையின் அராஜகம்
கடந்த 30 நாட்களாக காவல் துறையி னர் பலர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். வாலிபர், மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்துக்கு நிதி கொடுப்பவர்கள், உணவு கொடுப்பவர்கள், வாடகைக்கு வாகனம் ஓட்டுபவர்கள் என அனைவரையும் தனித்தனியாக காவல் துறையினர் மிரட்டுகின்றனர். உளவுப் பிரிவு காவல் துறையினர் தினமும் வாலிபர், மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களை தனித்தனியாக போட்டோ, வீடியோ எடுக்கிறார்கள். மேலும் வாலிபர், மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களை மேடையில் கோஷம் போடவும், பாடல்கள் பாடவும் அனுமதிக்க கூடாது என்று போராட்டக் குழுவை மிரட்டு கின்றனர்.  இடதுசாரிகள்தான் போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள் என்று சொல்லும் சங்கிகளின் கவனத்திற்கு, சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியது போல், போராட்டத்தை தூண்டவில்லை முன்னின்று நடத்துகி றோம். கடைசி வரை உடன் இருக்கவும், போராட்டத்தை வளர்ப்பதற்கும், விரிவுபடுத்தவும் இடதுசாரி வாலிபர், மாதர், மாணவர் இயக்கங்கள் தீவிரமாக செயல் படும்.  - சரவணத்தமிழன் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வட சென்னை)