சென்னை, பிப்.29- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை யான சாந்தன் (55), கல்லீரல் செயலிழப்பு காரணமாக, புத னன்று (பிப்ரவரி 28) காலை 7.50 மணிக்கு உயிரி ழந்தார்.
அவரின் உடலை இலங் கைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பா மல் காலம் தாழ்த்தியதாக தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியது.
இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு, சாந்தனை பிப்ரவரி 27 அன்று ‘ஏர் ஆம்புலன்ஸ்’ மூலம் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப் பட்டது, ஆனால் அவரது உடல் மருத்துவ ரீதியாக ஒத்துழைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சாந்த னின் உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவை யான உதவிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல தேவையான தூதரக அனுமதி, ஆவணங்கள் அனைத்தும் உடனடியாக வழங்கப் படும் என்று ஒன்றிய அரசுத் தரப்பிலும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.