tamilnadu

img

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் கைது  

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.  

சென்னை - ஜல்லடையான் பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையின் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஆபிரகாம் அலெக்ஸ்(48). இவர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து 3 ஆம் ஆண்டு படிக்கும் மாணவிகள் 2 பேர், கல்லூரி துறை தலைவர் பத்மநாபனிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.  இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் நேற்று கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிகரணை போலீசார், கல்லூரி முதல்வர் ராம்நாதன் மற்றும் பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.  போலீசார் விசாரணையில் பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிய வந்தது. அதனைதொடர்ந்து பேராசிரியர் மீது 354(I),(II) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பள்ளிக்கரணை போலீசார் கைது செய்தனர்.      

;