சென்னை,ஜூலை 14- பா.ஜ.க. தமிழ்நாட்டிலும் வட இந்தியா போல் இந்துத்துவா கொள்கையைத் திணிக்க தந்திரமான சில முறைகளை படிப்படியாக நுழைத்து எதிர்த்து வெற்றி பெற முடியாததால் இப்படி ஒரு தந்திர முறையைக் கையாளுகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர்விடுத்துள்ள அறிக்கையில் ஒட்டகம் கூடாரத்திற்குள் உள்ளே நுழைவது எப்படி லாவகமாக நடைபெறுமோ அப்படியே - இங்கே உள்ள திராவிடக் கொள்கை முத்திரை உடைய ஆட்சியையும் மிரட்டி பணிய வைப்பதோடு, சில மறைமுக துவக்கங்களை ஒத்திகைகளாகப் பார்த்து, தமிழ்நாட்டில் காலூன்றிட, சில வியூகங்களை வகுத்து மத்தியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.க. ஆட்சி கட்சிகள் இரண்டும் இதனைச் செய்யத் துவங்கி விட்டன. உதாரணமாக ‘நீட்’ தேர்வு விலக்குக்கு சட்டத்தில் இடமிருக்கிறது என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா முதல்வ ராக இருந்தபோது ஓராண்டு தள்ளி வைக்கவில்லையா? அடுத்து, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்குக் கோருவது சம்பந்த மான மசோதாவை ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி அனைவரும் ஒருமித்து நிறைவேற்றியதோடு, குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுவிட்டார். “கிராமப்புற மாணவர்க ளுக்கு வசதியாக ஒரு பட்டிய லைத் தயாரித்துக் கொடுங்கள்” என்று நிர்மலா சீதாராமன் - கூறி திசைத் திருப்பும் வேலையும் நடைபெற்றது. தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில்தான் இரட்டை இலக்க “சூப்பர் ஸ்பெஷாலிட்டி” கல்வி வாய்ப்பு கள் உண்டு. அவையெல்லாம் பிற மாநிலத்தவரின் ஆக்கிர மிப்புக்கே ஆளாக்கப்பட்டு ள்ளன. `ஹிந்துத்துவா வெறி பசுவதைத் தடை சட்டம் இங்கே கிடையாது. மாட்டுக் கறி விற்பதற்கோ, உண்பதற்கோ எத்தடையும் இல்லாத தமிழ்நாட்டில் - நாகையில் முதல் ஒத்திகையாக பொரவச்சேரியில் ஒரு இஸ்லாமியரை அவர் மாட்டுக்கறி உண்டார் என்பதற்காக வெறிக் கும்பல் ஒன்று தாக்கியிருக்கிறது. காவல்துறையினர் ஒன்றும் செய்யாது என்று கருதி! இப்படி - வடமாநிலங்களில் உள்ள பசு பாதுகாப்பாளர்கள் இங்கே ஒத்திகை பார்க்க முனைந்துள்ள னர். எனவே அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் இது. எதிர் வந்துள்ள ஆபத்தினைப் புரிந்து கொண்டு செயலாற்றுவோம். இவ்வாறு வீரமணி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.