tamilnadu

img

தமிழக மீனவர்கள் தொடர் கைது

சென்னை, பிப். 5- கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக  இருப்பதைத் தடுக்க ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என  ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர் நீதி மன்றத்தில் மீனவர் பாது காப்பு அமைப்பின் சார்பில் தாக்கல் செய்த மனுவில், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஜனவரி 22ஆம் தேதி கைது செய்துள் ளனர்.

எனவே, இலங்கை கடற்படையால் கைது செய் யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய, மாநில அரசு களுக்கு உத்தரவிட வேண் டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு, தலைமை  நீதிபதி சஞ்சய் கங்காபுர் வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசா ரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர் மவுரியா, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்படுகிறது. கைது செய்யப்பட்ட மீன வர்களை மீட்க தூதரக  அளவில் நடவடிக்கை எடுக்க  ஒன்றிய அரசுக்கு உத்தரவிட  வேண்டும். திங்களன்றும் (பிப். 5) 23 மீனவர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சினை குறித்து தீர்வு காண ஒன்றிய, மாநில அரசு கள் இணைந்த கூட்டுக் குழுவை அமைக்க வேண் டும் என வாதிட்டார். தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என ஒன்றிய அரசுக்கு,  தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் அனுப்பியிருக்கிறார். கைது செய்யப்பட்ட மீன வர்களின் குடும்பத்தின ருக்கு ஒரு நாளைக்கு  250 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், இந்த விவகாரத்தில் தூதரக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினார். இதையடுத்து நீதிபதி கள், மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது.

இதை தடுக்க ஏன் ஒன்றிய  அரசு நடவடிக்கை எடுக்க வில்லை? ஏன் இந்த நிகழ்வு கள் தொடர்ந்து நிகழ்கிறது?  என கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் விளக்க மளிக்க உத்தரவிட்ட நீதிபதி கள், விசாரணையை மார்ச்  11ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.