tamilnadu

வடசென்னை மாவட்டத்திற்கு தனி நலவாரிய அலுவலகம்

வடசென்னை மாவட்டத்திற்கு  தனி நலவாரிய அலுவலகம்

 தையல் சங்க மாநாடு வலியுறுத்தல்

சென்னை, மே 12- வடசென்னை மாவட்டத்திற்கு தனி நலவாரிய அலுவலகம் அமைக்க வேண்டும் என தையல் சங்க மாநாடு வலி யுறுத்தியுள்ளது. சென்னை பெருநகர தையல் தொழி லாளர் சங்கத்தின் அம்பத்தூர் பகுதி 10ஆவது மாநாடு தோழர் வி.பி.சிந்தன் நினை வகத்தில் ஞாயிறன்று (மே 11) நடை பெற்றது. தலைவர் டி.கே.சம்பத்ராவ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆர்.வேலு சங்க கொடியை ஏற்றினார். இணைச் செயலாளர் ஆர்.வேதநாயகம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.குணசேகரன் மாநாட்டை துவக்கி வைத்தார். செய லாளர் எஸ்.எம்.கவுரி வேலை அறிக்கையை யும்,  எஸ்.மைதிலி வரவு செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். சிஐடியு துணைத் தலைவர் எல்.பி.சரவணத்தமிழன், மாவட்ட பொருளாளர் ஆர்.மணிமேகலை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் மா.பூபாலன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். எஸ்.வித்யா நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

தையல் தொழிலாளர்கள் நல வாரி யத்திற்கு தனி நிதியம் உருவாக்க வேண்டும், தையல் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்றார் போல் தையல் நலவாரிய பணப்பயன்  களை அதிகரிக்க வேண்டும், வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தையல் கடைகளுக்கு உரிமம் பெற வேண்டும் என்று நிர்பந்திக்கக்கூடாது, வடசென்னை மாவட்டத்திற்கு தனி நல வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும், தமிழக அரசால் நடத்தப்படும் இலவச பள்ளி சீருடை தைக்கும் பெண் தையல் தொழி லாளர்களுக்கு பாரபட்சமின்றி அனை வருக்கும் துணிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

தேர்வு நிர்வாகிகள்

தலைவராக டி.கே.சம்பத்ராவ், செய லாளராக எஸ்.மைதிலி, பொருளாளராக டி.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.