tamilnadu

வெயிலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைப்பு

சென்னை, மே. 5- வெயிலால் பாதிக்கப்படும் நோயா ளிகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னை யில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சனிக்கிழமை (மே 4) முதல் கத்திரி வெயில் தொடங்கி யுள்ளது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கத்திரி வெயிலின் தாக்கம் இருந்தது. வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசுவதால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வரு கிறார்கள்.

சென்னையில் நுங்கம் பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய பகுதி களில் 100 டிகிரியை தாண்டியே வெப்பத்தின் அளவு பதிவாகி வரு கிறது. கடும் வெயிலையும் பொருட் படுத்தாமல் வேலை காரணமாக வெளி யில் செல்லும் பொதுமக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப்படி செல்லும் போது அவர்க ளுக்கு நீர்ச்சத்து குறைவு ஏற்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் உடலில் இருந்து அதிக வியர்வை வெளி யேறும் போது உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலை சுற்றல், தசைப் பிடிப்பு, மயக்கம், வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இது போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது சிலர் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால், அவர்க ளுக்கு பக்கவாதம், மூளை சம்பந்தப் பட்ட நோய்கள் ஏற்படுகிறது. எனவே வெப்பத்தால் உடல் நலக் குறைவு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவத்துறை அறிவுறுத்தி வருகிறது.

கத்திரி வெயி லின் தாக்கத்தால் வெப்பம் சார்ந்த நோய்கள் அதிகமாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே, அதற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்ட்டுள்ளது. அந்த வகையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை யில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி வார்டுகள் அமைக்கப்பட்டு ள்ளது. ஒவ்வொரு வார்டிலும் 10 படுக்கைகள் வீதம் மொத்தம் 20 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக் கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியில் ஈடுபட்டுள் ளனர்.

அதேபோல் ராயப்பேட்டை அரசு  மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட் டுள்ளது. இந்த வார்டில் 3 வெண்டி லேட்டர் கருவிகளும், ரத்த பரி சோதனை உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் வெப்பத்தால் பாதிக்கப் படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தீவிர சிகிச்சைப் பிரிவில் 5 படுக்கைகள் தனியாக ஒதுக்கப்பட் டுள்ளது. இந்த தனி வார்டுகளில் அரிசி கஞ்சி, ஓஆர்எஸ் கரைசல் ஆகியவை வழங்கப்படுகிறது.