துணைத் தேர்வுகள்: கல்வித்துறை ஏற்பாடு
சென்னை, மே 3 - தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சத்திற் கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். அப்போது, பல்வேறு காரணங் களால் மாநிலம் முழுவதும் 40 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை யடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதாததற்கான காரணங்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புக்களை நடத்தி, மீண்டும் தேர்வு எழுத வைப்பதற்கான நட வடிக்கையில் கல்வித்துறை இறங்கி யுள்ளது.
மூத்த பத்திரிகையாளர் மறைவு: முதல்வர் இரங்கல்
சென்னை, மே 3- 50 ஆண்டுகளுக்கும் மேலாக தினத்தந்தி நாளிதழில் ஆசிரியராகப் பணியாற்றியவர் மூத்த பத்திரிகை யாளர் தினத்தந்தி ஐ. சண்முகநாதன் (90). இவர் முதுமை காரணமாக மே 3 அன்று காலமானார். சண்முகநாதனின் மறைவையொட்டி இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்,“ 2021-ஆம் ஆண்டுக் கான கலைஞர் எழுதுகோல் விருது பெற்ற சண்முகநாதன் நீண்ட நெடிய அனுபவத்துக்கும், எண்ணற்ற பங்களிப்புக்கும் சொந்தக்காரர். அவரது மறைவு இதழியல் உலகிற்கு பெரும் இழப்பு” என்று தெரிவித்துள்ளார்
காற்றாலை மின்சார உற்பத்தி துவங்கியது!
சென்னை, மே 3 - தமிழகத்தின் மின்நுக ர்வு 454.32 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ள நிலை யில், ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் அதிக வெப்பம் நிலவும் நாட்களும் சனிக்கிழமை முதல் வாட்டியெடுக்க உள்ளது. இத னால், இனிவரும் நாட்களில் மின்தேவை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலை யில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் காற்றாலை மின்னுற்பத்தி துவங்கி யுள்ளது. வியாழனன்று ஒரே நாளில் 916 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத அதிமுக அரசு
18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனங்கள் ரத்து!
சென்னை, மே 3 - அதிமுக ஆட்சிக் காலத்தில் டிஎன்பி எஸ்சி மூலமான 18 மாவட்டக் கல்வி அலு வலர் பணி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் காலியாக இருந்த 18 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங் களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தியது. இதில் 4 பணியிடங்கள் ஆசிரியர்களாக பணியாற்றியவர் களுக்கும், ஏனைய 14 பணியிடங்கள் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ஒதுக்கீட்டில் முறையான இன சுழற்சி முறையை பின் பற்றாமல் பணி நியமனங்கள் வழங்கப் பட்டதாக சென்னையைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
குறிப்பாக, அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட தேர்வர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், அவர்களுக்கான இட ஒதுக்கீடு ஆசிரியர் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட தாகவும், உரிய இன சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
வெள்ளிக்கிழமை (மே 3) இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, கடந்த 2020-ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான பணி நியமன பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், 4 வாரத் திற்குள் முறையான இடஒதுக்கீடு முறை யை பின்பற்றி, புதிதாக மாற்றியமைக்கப் பட்ட பட்டியலை வெளியிடவும் உத்தர விட்டு, வழக்கை முடித்துவைத்தார்.