சென்னை, ஜன. 30 - சங்கிகள் என்றால் மதச்சார்பின் மைக்கு எதிரானவர்கள், இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிப்பவர் கள் என்று மக்கள் புரிந்து வைத்திருக் கிறார்கள் என்று மூத்த பத்திரிகை யாளர் என். ராம் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, செவ்வாயன்று (ஜன.30) சென்னை காந்தி மண்ட பத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாலை அணிவித்து, மதவெறிக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைப்பின் மாநில ஒருங்கிணைப் பாளர் க. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பத்திரி கையாளர் என். ராம், பேரா. கல்பனா, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர். வேல்முருகன், சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப் பாளர் எஸ். குமார், இந்திய ஒற்றுமை இயக்கத்தை சேர்ந்த பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய என். ராம், “விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. மக்களை ஒன்று சேர்ப்பதில், அவரின் தலைசிறந்த பங்களிப்பை சிலர் குறைத்து பேசு கின்றனர். அத்தகையோர் வரலாறு அறி யாதவர்கள்.
அவர்கள் வரலாற்றை மாற்றி தவறான தகவலை பரப்பு கின்றனர்” என்று குறிப்பிட்டார். பின்னர் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த என். ராம், “சங்கி என்பவர்கள் மதச்சார் பின்மைக்கு எதிராக, இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிக்கும் பாதையில் இருப்பவர்கள் என்று பொருள். ஆர்எஸ்எஸ் அதனுடன் சேர்ந்த விஎச்பி, பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளை சார்ந்தவர்கள்தான் சங்கி என்று அழைக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்த என்.
ராம், “இவர் கள்தான் பாபர் மசூதியை இடித்தார் கள். சங்கி என்றால் யார் என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொள்கிறார் கள். அதேநேரம் சங்கி என்றால் ரஜினி காந்திற்கு தனி கருத்து இருக்கலாம்” என்றும் குறிப்பிட்டார்.