tamilnadu

img

மூத்த பத்திரிகையாளர் கே.சுப்பிரமணியன் காலமானார்...

சென்னை:
மூத்த பத்திரிகையாளர் கே.சுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் திங்களன்று (அக்.19) காலமானார். அவருக்கு வயது 68.சென்னை தினமலர் நாளிதழில் செய்தியாளராக பணியாற்ற தொடங்கிய கே.சுப்பிரமணியன், தினமணி நாளிதழில் 30 வருடம் பணியாற்றினார். அதன்பின்னர் தினமலர் நெல்லை பதிப்பில் பணிபுரிந்து வந்தார்.சென்னை நிருபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர்.மறைந்த சுப்பிரமணியத்துக்கு மனைவி அருள்மொழி, இரு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர்.
மூத்த பத்திரிகையாளர் சுப்பிரமணியத்தின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம், டியுஜே உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.