சென்னை, மே 13 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் எம். செல்வராசு எம்.பி. (67) காலமானார்.
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவரான தோழர் எம். செல்வராசு, நாடாளுமன்றத் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், உடல் நலிவுற்று, சென்னை யிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, திங்களன்று (13.05.2024) அதிகாலை 02.40 மணிக்கு அவர் காலமானார்.
செல்வராசு மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் இரங்கல்
முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நாகப் பட்டினம் எம்.பி. செல்வராசு மறை வுற்ற செய்தி அறிந்து மிகவும் வேத னை அடைந்தேன். அவரது மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், டெல்டா மக்களுக்கு ஈடுசெய்ய முடி யாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலை யும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரி வித்துள்ளனர்.
தோழர் செல்வராசுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழ்நாடு முழு வதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகள், செங்கொடியினை அரைக் கம்பத்திற்கு இறக்கி விட வேண்டும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் 5
தோழர் எம். செல்வராசு - திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கப்பலுடையான் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பமான முனியன் - குஞ்சம்மாள் தம்பதியரின் மகனாக 1957 மார்ச் 16 அன்று பிறந்தவர் ஆவார்.
சிறுவயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கிய தோழர் செல்வராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டத் துணைச் செயலாளர், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் நீண்ட காலம் செயல்பட்டவர்.
வர்க்க எதிரிகளால் படுகொலை செய்யப்பட்ட சித்தமல்லி தோழர் எஸ்.ஜி. முருகையனின், மூத்த மகள் கமலவதனத்தை வாழ்விணையராக ஏற்ற செல்வராசு, கமலவதனம் திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக பணியாற்ற ஊக்கம் அளித்தவர்.
நான்குமுறை எம்.பி.,
1989-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் பேட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக மக்களவைக்கு சென்ற தோழர் எம். செல்வராசு, தொடர்ந்து 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளிலும் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். நாடாளுமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து போராடினார். இந்நிலையில், சிறுநீரகப் பாதிப்பு காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ளும் சிகிச்சை பெற்ற செல்வராசு, உடல் நலிவுற்ற நிலையிலும் நாடாளுமன்றத் தேர்தல் பணியாற்றினார். அதைத்தொடர்ந்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த செல்வராசு, திங்களன்று அதிகாலை 02.40 மணிக்கு காலமானார்.
இறுதி நிகழ்ச்சிகள், கோட்டூர் ஒன்றியம் சித்தமல்லி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (14.05.2024) காலை 10 மணியளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்வராசு - கமலவதனம் தம்பதியருக்கு செல்வப்பிரியா, தர்ஷினி என இரு மகள்கள் உள்ளனர்.