அதிமுகவை சிறுமைப்படுத்தாதீர்! ஆவேசப்படுகிறார் செல்லூர் ராஜூ
மதுரை, மார்ச் 14- அதிமுக முன் னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மது ரையில் வியாழ னன்று செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது, “முன் னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது, பெரிய பெரிய கட்சிகளெல்லாம் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மாட்டார்களா? எனக் காத்தி ருந்தனர். இப்போது மன்சூர் அலிகா னோடு கூட்டணி பேச்சு நடத்தும் நிலை யில் எடப்பாடி இருக்கிறாரே..” என செய்தி யாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதனால், ஆவேசமடைந்த செல் லூர் ராஜூ, “எங்கள் கட்சியை சிறுமைப் படுத்தாதீர்கள். ஒவ்வொரு கால கட்ட மும் ஒவ்வொரு மாதிரி, நாங்கள் யாரை யும் கூட்டணிக்கு வாருங்கள் என அழைக்கவில்லை.. அவர்களாக வரு கிறார்கள். வருபவர்களை வரவேற்பது தான் தமிழரின் பண்பாடு. ஜெயலலிதா காலத்தை விட இப்போது அதிமுக வில் தொண்டர்கள் அதிகம்” என சமா ளித்துள்ளார்.
‘பாஜக ஒரு பாழுங்கிணறு’ மன்சூர் அலிகான் கிண்டல்
சென்னை, மார்ச் 14- நடிகரும், இந் திய ஜனநாயகப் புலி கள் கட்சியின் தலை வருமான நடிகர் மன் சூர் அலிகான் வியாழ னன்று செய்தியாளர் களிடம் பேசினார். அப்போது, சிஏஏ சட்டத்தை கொண்டு வந்துள்ள மோடியை தோற்கடிப்பேன். இந்த மண்ணிற்கே சம்பந்தமில்லாதவர் மோடி என்று விமர்சித்தார். அப்போது அவரிடம், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் கரைத்த சரத்குமார் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், “கிளியை வளர்த்து பாழுங் கிணற்றுல தள்ளிட்டியே நாட்டாம...” என கிண்டலடித்துள்ளார்.
ஈரோடு போலீசில் குஷ்பு மீது புகார்
ஈரோடு, மார்ச் 14- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கும் ரூ.1,000 மகளிர் உரிமை தொகையை கொச்சைப்படுத்தி பேசிய நடிகை குஷ்பு மீது ஈரோடு மாவட்டம் பவானி காவல்நிலையத்தில், பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி புகாரளித்துள் ளார்.