புதுச்சேரி, பிப். 23- புதுச்சேரி வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளியில் “தேர்வும் தன்னம்பிக்கையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் திட்ட அலுவலர் ஆசிரியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தாகூர் கலைக்கல்லூரி தத்துவத்துறை பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் கலந்து கொண்டு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் தன்னம்பிக்கையோடு தேர்வைச் சந்திக்க ஆலோசனை வழங்கினார். மேலும் மாணவிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆசிரியை ஆல்பர்ட் ரமணா வரவேற்றார். திட்ட அலுவலர் டாக்டர் குமரன் நன்றி கூறினார்.