tamilnadu

விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் 

 ஆலந்தூர், ஜூன் 9- சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டி லிருந்து வரும் விமானப் பயணிகளை அதிகாரிகள் பரிசோதனை நடத்தினர். அப்போது, துபாயிலிருந்து வந்த கேரள மாநிலம் கோழிக்கோடு அதனான் (36), மலப்புரம் ஷிபியுல் ரகுமான் (25) ஆகியோரிடம் விசா ரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முர ணாக பதில் அளித்துள்ள னர். பின்னர் நடத்திய சோத னையில் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தங்கக் கட்டிகளை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.65 லட்சத்து 50 ஆயிரமாகும். இதனையடுத்து, இருவரை யும் கைது செய்தனர். இதேபோல் இலங்கை தலைநகர் கொழும்பிலி ருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சீதாலட்சு மியை (63) தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.  இதில், அவரிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 131 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

;