tamilnadu

img

மு.முருகேஷ், அ.வெண்ணிலாவிற்கு மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டு

பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற கவிஞர் மு. முருகேஷ் அவர்களையும், சிறந்த புதினத்திற்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெற்ற அவரது இணையர் அ. வெண்ணிலா அவர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 
தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் ஆகியோர் சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் போது  மு. முருகேஷ் அவர்கள் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற “அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை” என்ற புத்தகத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனுக்கு வழங்கினார்.