tamilnadu

img

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது! - அமைச்சர் உத்தரவு

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளி நிர்வாகங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார். கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.