tamilnadu

img

பிப்ரவரி 1 முதல் அனைத்து வகுப்புகளும் செயல்பட பள்ளி கல்வித்துறை பரிந்துரை

தமிழகத்தில் பிப்ரவரி 1-இல் இருந்து  1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கொரோனா தொற்றின் மூன்றாம் அலை வேகமெடுத்ததை தொடர்ந்து  தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இரவுநேர ஊடரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு ஞாயிறன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள்,  பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முதல்வரிடம் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஒப்புதல் தரும் பட்சத்தில் ஒரு வாரத்திற்குள் பள்ளிகளை சுத்தப்படுத்தி கொரோனா விதிமுறைகளை பின்பற்றி  முழு அளவிலான மாணவர்களுடன் செயல்படத் தயாராக இருக்கிறோம் என்றார்.