tamilnadu

img

சாத்தான்குளம் சம்பவம்: இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு

சென்னை:
கோவில்பட்டி சிறையில் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளியன்று (ஜூன் 26) ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத் தான்குளத்தில் ஊரடங்கு நேரத் தில் கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
இருவரையும் அடித்துக் கொன்ற காவலர்கள் மீது இரட்டைக் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வியாபாரிகள்  உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து, நீதித் துறை மேல் நம்பிக்கை வைத்து உடலை வாங்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.இதனிடையே, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக் கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிக்கை ஒன்றில் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, “சாத்தான்குளம் வியாபாரிகள் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், குற்றவாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் ஜூன் 26 வெள்ளிக்கிழமை ஒருநாள் முழு கடையடைப்பு போராட் டம் நடைபெறும்” என்றார்.தொடர்ந்து, மாலை 5 மணிக்கு அந்தந்த சங்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி கூட்டம் நடத்தப்படும் என்பதை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம். இந்த ஒரு நாள் கடையடைப்பு என்பது அடையாள கடையடைப்பு மட்டுமே.தொடர்ந்து, வரும் 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் நேரடியாக பேரமைப்பு நிர்வாகிகள் சென்று புகார் மனு அளிக்கும் அறப்போராட்டம் நடைபெறும்.எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

;