சென்னை, டிச.2- ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணைப் பொதுச்செய லாளராக டி.டி.வி.தினகரனும், அதிமுக பொதுக்குழு மூல மாக இடைக்கால ஏற்பாடாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்பிறகு சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சி யில் இருந்து நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.
பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரி வி.கே.சசிகலா சென்னை உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்ற உரிமையி யல் நீதிமன்றம், சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.செந்தில்குமார் ஆகி யோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கடந்த மாதம் உத்தரவிட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை திங்களன்று (டிச.4) காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர்.