சென்னை, ஆக.30-
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
காவிரி டெல்டா மாவட் டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட் டூர் அணை ஜுன் 12 இல் திறக்கப் பட்ட போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. மாநில அரசு குறுவை சாகுபடிக்கான இலக்கு 5 லட்சம் ஏக்கர் என அறிவித்தும், குறுவை தொகுப்பு திட்டத்தை அறி வித்து, ரசாயன உரமாக ஏக்கருக்கு ஒரு மூட்டை டி.ஏ.பி, ஒரு மூட்டை யூரியா, அரை மூட்டை பொட்டாஷ் உரங்களை வழங்கியது. விவசாயி கள் ஆர்வமுடன் குறுவை சாகு படியை மேற்கொண்டனர். ஆனால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப் பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகள் வரை முழுமையாக சென்றடை யாத நிலை ஏற்பட்டது.
காவிரியில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி கர்நாடகம் ஜுன், ஜுலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்க ளில் வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்காத நிலை யில் குறுவை பயிர்கள், நேரடி விதைப்பு தண்ணீரில்லாமல் காய்ந்து கருகி வருகின்றன. நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு முழு வதும் கருகிவிட்டதால், கருகிய பயிர்களை விவசாயிகள் தற்போது உழுதுவிட்டனர்.
காவிரியில் தமிழகத்திற்கு சட்டரீதியாக கிடைக்க வேண்டிய தண்ணீரை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு பல முயற்சிகளை மேற் கொண்டு வருவதை விவசாயிகள் உணர்கிறோம். உச்சநீதிமன்றத் தில் தமிழக அரசு தொடுத்த வழக்கை விசாரித்து தனிஅமர்வை அமைத் தது. தற்போது வழக்கு தனி அமர்வு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் 29.8.2023 அன்று நடை பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத் திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட் டுள்ளது. ஆனால், கர்நாடக அரசு இந்த உத்தரவை செயல்படுத்த இய லாது என அறிவித்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது. ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்காத கர்நாடகம் தற்போது, வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் வேண்டுமென்று தமிழகம் கோரிய போதும் ஒழுங்காற்றுக்குழு பரிந் துரைப்படி காவிரி ஆணையம் திறக்க உத்தரவிட்ட 5 ஆயிரம் கன அடியையும் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு அடம்பிடிக்கும் நிலையில் தன்னாட்சி அமைப்பான காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக தமிழகத்திற்கு தண் ணீர் திறக்கும் பொறுப்பை தானே மேற்கொள்ள வேண்டும்.
மேலும், காவிரி டெல்டா மாவட் டங்களில் சாகுபடி நடந்துள்ள எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாத்திட தற்போது மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் போது மானதல்ல. உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் படி கர்நாடகம் காவிரியில் மாதவாரியாக வழங்க வேண்டிய தண்ணீரை பெற்றால் மட்டுமே குறுவை பயிரை பாதுகாக்க முடி யும், இந்த நிலையில் குறுவையை இழந்த விவசாயிகள் சம்பா சாகு படி பணிகளை மேற்கொள்வதா? வேண்டாமா என்ற கவலையில் உள்ளனர்.
கடந்த காலங்களில் இது போன்ற நிலை ஏற்பட்ட போது அர சின் சார்பில் சம்பா தொகுப்பு திட் டங்களை அறிவித்து, வடகிழக்கு பருவமழையின் தன்மையை பொறுத்து நேரடி விதைப்பு மூலம் சம்பா சாகுபடி பணிகள் நடை பெற்றுள்ளது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு சம்பா சாகு படி காலமான செப்டம்பர் துவங்க வுள்ள நிலையில், காலத்தோடு காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு சம்பா மற்றும் தாளடி சாகுபடியை விவசாயிகள் மேற் கொள்வது குறித்து தமிழ்நாடு அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.