ஸ்பெயின் கம்யூனிஸ்ட் தலைவர் டோலரேஸ் இபர்ருரியின் மகனான ரூபன் ரூஸ் இபர்ருரி, 1920 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பிறந்தார். இவ ரது தாய் ஜூலியன் ரூஸ் கம்யூனி ஸ்ட் கட்சி நிறுவனர்களில் ஒருவர். 1935 இல் ரூபனின் தாய் கைது செய்யப்பட்ட பிறகு, இவர் பிற குழந்தைகளுடன் சேர்த்து சோவியத் ஒன்றியத்தில் விடப்பட்டார். அங்கு, கம்யூனிஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்த (பழைய போல்ஷிவிக்) ஓ.பி. மற்றும் பி.என். லெபெஷின்ஸ்கி ஆகியோரின் குடும்பத்தில் வாழ்ந்தார். பின்பு, பெற்றோர் இல்லாத குழந்தைகளை வளர்ப்பதற்காக, பாரம்பரியமிக்க ஒரு நீண்ட குடும்ப மையத்தை துவங்கினார். ஸ்பெயின் உள் நாட்டுப் போர் தொடங்கியவுடன், ரூபன் ஸ்பானிஷ் சர்வதேச படைப்பிரிவுகளில் சேர்ந்து போராடினார். போருக்குப் பிறகு அவர் சோவியத் ஒன்றியம் திரும்பினார். பெரும் தேசபக்த போரில் பங்கேற்பதில் முனைப்புடன் இருந்தார் ரூபன். போரிசோவ் நகருக்கு அருகில் நடந்த முதல் போரில், ரூபன் மற்றும் அவரது சக வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போரின் போது ரூபன் ரூஸ் காயமடைந்தார். போரில் பங்கேற்றதற்காக, ரூபனுக்கு ‘ஆர்டர் ஆப் தி ரெட் பேனர்’ விருது வழங்கப்பட்டது. 1942 ஆக.23 இல் ஜெர்மன் தொட்டிக் குழு (German Tank Group), சோவியத் படையின் முக்கிய குழுவிலிருந்து ஸ்டாலின் கிராட்டைத் துண்டிப்பதாக அச்சுறுத்திய நிலையில், ஆக.24 அன்று, ஜெர்மன் படை தாக்குதலைத் தொடங்கியது. இந்தப் போரில் பங்கேற்ற ரூபன் பலத்த காயமடைந்தார். இந்த காயம் காரணமாக, செப்.3 அன்று தனது 22 ஆவது வயதில் ரூபன் ரூஸ் இபர்ருரி மரணமடைந்தார். ஜெர்மன் பாசிசப் படையினருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற இவருக்கு, ‘ஹீரோ ஆப் தி சோவியத் யூனியன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும், 1956 ஆக.26 அன்று சோவியத் ஒன்றியத்தின் கோல்டன் ஸ்டார் விருதும், ஆர்டர் ஆப் லெனின் உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டன.
இன்று தோழர் ரூபன் ரூஸ் இபர்ருரி நினைவு நாள்